சீனாவில் நிலநடுக்கம் - 4 பேர் பலி

Published By: Digital Desk 3

19 May, 2020 | 11:40 AM
image

சீனாவின் தென்மேற்கில் உள்ள  யுன்னான் மாகாணத்தின் கியாஜியோ கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குறித்த நிலநடுக்கம் 5.0 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் பல கட்டிடங்கள் அதிர்ந்துள்ள நிலையில், மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  

நேற்று திங்கட்கிழமை  இரவு 9.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் பலியானதாகவும் 24 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.0 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர்.

2008 ஆம் ஆண்டில் சிச்சுவானில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தில் 87,000 பேர் இறந்தது அல்லது காணாமல் போயுள்ளனர்.

Photo: AFP

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47