கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ்.மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர்

15 May, 2020 | 04:57 PM
image

(எம்.நியூட்டன்)

கடற்தொழிலாளர்களுக்கு சமூர்த்தியும் அதனோடு இணைந்த உதவித்திட்டங்களே கிடைக்கப் பெற்றுள்ளதே தவிர வேறு எத்தகைய உதவிகளும் அரசாங்கத்தினால் எமக்குக் கிடைக்கவில்லை பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு விசேட உதவித் திட்டங்களைச் செய்யவேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இவ் விடையத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தாக்கத்திலும் கடல் தொழில் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியபோதும் ஆழ்கடலுக்குச் சென்று தொழில் செய்யமுடியாத நிலையில் சிறு தொழில் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றது. 

ஆழ்கடல் தொழில் சென்றாலும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் இத்தொழிலை அனைவரும் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக குறிப்பிட்ட அளவிலானவர்களே தொழில் ஈடுபட்டு வருகின்றமையினால் போதியளவு கடல் உணவுகள் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

கடற்றொழிலாளர்களிடம் இடைத்தரகர்கள் கடல் உணவுகளை பெற்று அதிகளவான இலாபத்திற்கே மக்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்.

இதனால் கடலுக்குச் சென்று வருகின்ற தொழிலாளர்கள் உரிய விலையில் கடல் உணவுகளை விற்பனை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.   பொது மக்களைப் பொறுத்தவரையில் கடற்றொழிலாளர்கள் மீதே இந்தக் குற்றச்சாட்டுகள்கள் கூறப்படுகின.

தொழிலாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு உரியவர்கள் அதற்கான ஒரு திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

வெளிமாவட்டங்களுக்கு குறைந்தளவிலான கடலுணவுகள் அனுப்பப்படுவதனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலைச் செய்யமுடியாத நிலையே காணப்படுகின்றது எனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற கடற்றொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25