பெருந்தோட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க 15 இலட்சம் ரூபாய் கடன் வசதி : அமைச்சரவையில் அங்கீகாரம்

Published By: J.G.Stephan

15 May, 2020 | 09:57 AM
image

(ஆர்.யசி)

பெருந்தோட்ட  பகுதிகளில்  மக்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் கடனை 15 இலட்சமாக அதிகரிக்கக்கோரி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமாக மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் இதுவே மிகச்சிறந்த திட்டம் என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தோட்டப்புறங்களில் குறைந்த அடிப்படைவசதிகளுடன் வாழும் மக்களுக்கு வீட்டுத்திட்டமொன்று இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் கடன் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என இருந்ததை, இப்போது 15 இலட்சம் வரையில் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும்,  இந்த கடன் தொகை 4 வீத வட்டியுடன் 20 வருடகால கடனாக மீள் செலுத்தும் வரையில் சலுகைகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டவும் சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் யோசனை ஒன்றினை முன்வைத்தார். அது அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்திய கடன் உதவியில் மலையகத்தில் வீட்டுதிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. மறுபுறம் அரசாங்கம் இவ்வாறான வீடுகளை புனரமைக்க ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில், சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்துள்ள யோசனையானது, இதுவரை காலமாக மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் உயரிய ஒன்றாகும். இது குறித்த முழுமையான விளக்கம் இன்று அரச தகவல் திணைக்களதில் முன்னெடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55