பொதுத் தேர்தலை சாவலுக்குட்படுத்தும் உரிமை மீறல் மனுக்களை பரிசீலிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம்!

Published By: Vishnu

14 May, 2020 | 05:04 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அது சார்ந்த இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை  பரிசீலிக்க ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் நியமிக்கப்பட்டுளது.  

பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த ஜயசூரிய இந்த நீதியரசர்கள் குழாமை இன்று பெயரிட்டுள்ளார்.

எதிர்வரும் திங்களன்றும் செவ்வாயன்றும் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில்,  பிரதம நீதியர்சர் ஜயந்த  ஜயசூரிய  தலைமையில், நீதியர்சர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   குறித்த நீதியர்சர்கள் குழாமில்  பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மனுக்களில்,  ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,  ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58