வவுனியா பம்பைமடு கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கடற்படையினரின் குடும்பத்தினரில் 129 பேர் முகாமில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 192 பேர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கொவிட் 19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 129பேர் இன்றையதினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருணாகலை, மொனராகலை, கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.
குறித்தமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 161 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 31பேர் குறித்த முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM