(ஆர்.யசி)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து முன்வைத்த கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்பை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விமர்சனக் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் அக்கருத்து குறித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துகொண்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி கருத்துக்களை முன்வைப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அக் கட்சியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எழுத்துமூல அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் முன்வைத்த கருத்து தனது சொந்தக் கருத்து, எனது நிலைப்பாட்டை கூறுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆயுத போராட்டம் என்ற கொள்கை எனக்கு பிடிக்காது என்றே கூறினேன், மாறாக விடுதலைப்புலிகளின் போராட்டம் தவறு என்றோ, பிரபாகரன் தவறான கொள்கையை கொண்டவர் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.
எனது கருத்து குறித்து நான் எந்தவித மாற்று நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப்புலிகள் செய்த தியாகத்தை நான் மதிக்கிறேன். அதற்கான அதனை அரசியல் ஆயுதமாக கையில் எடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என சுமத்திரன் தான் முன்வைத்த கருத்து குறித்து விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.
எனினும் சுமந்திரனின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்தாகும்.
அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரை அரசியல் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முடியாதுள்ளது, எனவே நிலைமைகள் வழமைக்கு வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் வரவழைத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும்,தேர்தல் காலம் என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் அடுத்த கட்ட வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
சுமத்திரன் நிதானமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதேபோல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை மக்களிடம் திரிபுபடுத்தாது கொண்டு செல்ல வேண்டும். எவ்வாறு இருப்பினும் கட்சி என்ற வகையில் சகல தரப்புடனும் இது குறித்து பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM