அவதானம்: கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

Published By: Robert

27 Jun, 2016 | 04:40 PM
image

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே பொது மக்கள் விழிப்புடனும் தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர். விஜேமுனி தெரிவித்தார். 

குளிர்சாதனப் பெட்டியிலுள்ள தட்டுகள் (டிரேக்களில்) அதிக நுளம்புகள் முட்டையிட்டு பெருக்கம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுரை வழங்கினார். 

இது தொடர்பாக கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் கூறுகையில், 

இலங்கை முழுவதும் அதேபோன்று மேல்மாகாணம் உட்பட கொழும்பு மாநகரிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. கொழும்பு மாநகருக்குள் 1694 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தொகையில் 1355 பேருக்கு டெங்கு நோய் தோற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட நூற்றுக்கு 16 வீதத்தினால் அதிகரித்துள்ளது. 

டெங்கு நுளம்புகள் அதிகம் பரவும் இடங்களாக கிருலப்பணை, கிருள வீதி, பாமன்கடை, நாரஹேன்பிட்டி,வெள்ளவத்தை, மிலாகிரிய, முகத்துவாரம், வனாத்தமுல்ல, தெமட்டகொடை என பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

விசேடமாக வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் தட்டுகளில் (டிரேயில்) தான் பெண் நுளம்புகள் அதிகம் முட்டையிட்டு நுளம்பு பெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தத்தமது வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்குமாறும், சுற்றுச் சூழலை நுளம்புகள் பெருகாத விதத்தில் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, நுளம்புகளை அழிப்பதற்காக புகை அடித்தல், இரசாயன திரவம் தெளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் விஜேமுனி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24