(ஆர்.ராம்)
அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என்று கூறிய அவர் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயற்பாடுகளை புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனான(முன்னாள்) கூட்டம் மற்றும் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகிய தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறி;த்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ்க் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிரதான கருமமாக கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசிமில்லை.
நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை உரிய தருணங்களில் பயன்படுத்தியுள்ளோம்.
தொடர்ந்தும் பயன்படுத்துவோம். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்க முடியாது. அந்த வகையில் தான் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்குள் பிரதமர் அனைத்து உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த சந்திப்பில் நாம் கலந்து கொண்டோம். எமது மக்களின் சமகால நெருக்கடிகள், அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வுகள்ரூபவ் அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டு அறிக்கையொன்றையும் கையளித்திருந்தோம்.
அதனையடுத்து பிரதமருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம். ஐந்து தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தினை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.
அதன் மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் தமிழ் மக்களின் இதரபிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதில் வேறுகாரணங்களைக் காட்டி தமதப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமாந்தரமாக ஜனநாயக பண்புக்களுக்கு மதிப்பளித்து சட்டத்தின் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்களை பிரதமரிடத்தில் பேசுவது தவறா? மேற்கூறிய விடயங்களுக்கு தீர்வு காண முயலாது இருக்க வேண்டுமா? நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM