டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்கொரிய வீரர் சன் ஹியுங்-மின் கப்பற்படையில் இராணுவ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த கால்பந்து வீரரான சன் ஹியுங்-மின், இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரேயொரு ஆசிய வலய கால்பந்தாட்ட வீரராக விளங்குகிறார்.தனது திறமையான ஆட்டத்தால் அணியின் முன்னணி வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தென் கொரிய கப்பற்படை முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த சன் ஹியுங் மின், இராணுவ அடிப்படையிலான பயிற்சிகள், பாதுகாப்பு குறித்த படிப்பு, துப்பாக்கிகளை சரியாக கையாள்வது, கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
சன் ஹியுங்-மின் எம்-16 தாக்குதல் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் படத்தை கப்பற்படை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு சன் ஹியுங்-மின்னுக்கு சல்யூட் அடித்த படத்தை வெளியிட்டு அவரை கெளரவப்படுத்தியிருந்தது.
தென்கொரிய ஆண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் அரசியல் ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதால், இரு நாட்டிலும் தமது இராணுவ ஆள்பலத்தை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில், வடகொரியாயில்13 இலட்சம் இராணுவ வீரர்களும், தென் கொரியாவில் 6 இலட்சம் இராணுவ வீரர்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM