இலங்கையின் கடற்கரைகளில்  மீட்கப்படும் சடலங்கள் இந்தியர்களா?

Published By: MD.Lucias

08 Dec, 2015 | 09:30 AM
image

இலங்கையின் நிலாவெளி மற்றும் மன்னார் கடற்கரைகளில் மீட்கப்பட்ட இருவேறு சடலங்கள் இந்திய பிரஜைகளினுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் இந்திய உயரிஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டார்.

 நிலவெளி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது அந்த சடலத்துக்கு அருகில் இருந்து இந்திய அடையாள அட்டை ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந் நிலையிலேயே அந்த சடலம் இந்தியர் ஒருவருடையதா என்ற  சந்தேகம் அதிகரித்துள்ளது.

இதனிடையே தலை மன்னார் பிரதேசத்தில் கரையொதுங்கிய சடலம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த சடலத்தின் தோள் பட்டையில் குத்தப்பட்டிருந்த பச்சையை வைத்து அது இந்தியர் ஒருவருடையதாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இவ்விரு சடலங்களும் நேற்று மாலைவரை அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

சடலங்கள் மன்னார் மற்றும் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள்  தொடர்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08