ஜேர்மனி எதிர்வரும் ஒரு சில தினங்களில் ஊரடங்கினை முற்றிலும் நீக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜேர்மனியின் பிரதமர் அஞ்ஜலா மேர்க்கெல் மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.
இதன்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதல், தொழில் நடவடிக்கைகளை மீட்டெடுத்தல் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது, ஜேர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பாடசாலைகள், ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்டுள்ளோம் என மேர்கெல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் கடந்த வாரம் தேவாலயங்கள், விளையாட்டு மைதானங்கள், நுதனசாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கினை முற்றாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜேர்மனியில் கொரோனாவால் 169,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7392 பேர் உயிரிழந்துள்ளனர். 141 700 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அத்துடன் ஜேர்மனியில் நேற்று மாத்திரம் 1268 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், 117 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM