கோடரியால் மனைவி தாக்கியதில் மதுபோதையிலிருந்த கணவன் பலி

05 May, 2020 | 08:03 PM
image

(செ.தேன்மொழி)

ஹாலி-எல  பகுதியில் கணவனை கோடரியால் தாக்கிய மனைவி கணவன் உயிரிழந்ததையடுத்து பொலிஸில் சரணடைந்துள்ளார். 

ஹாலியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரங்கல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், 36 வயதுடைய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையிலிருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதுடன், இது மோதலாக மாறியதை அடுத்தே மனைவி தனது கனவனை கோடரியால் தாக்கியுள்ளார்.  கணவன் உயிரிழந்ததை அறிந்த மனைவி பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே முரண்பாடுகள் காணப்படுவதாவும், இதன் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50