மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கணக்காய்வாளர் நாகயகம் மற்றும் கோப் குழுவுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கோப்குழுவுக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்குமிடையிலான இந்த சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் (கோப்) குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அவரை தொடர்ந்தும் அப்பதவியில் நிறுத்தக்கூடாது என ஒன்றிணைந்த எதிக்கட்சி தெரிவித்து வருவதுடன் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு இருக்கையில் மத்திய வங்கி ஆளுனர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டு கோப் குழுவின் விசாரணை முடிவடையும் வரைக்கும் அவரை மீண்டும் அந்த பதவியில் அமர்த்துவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை விசாரிக்கும் முகமாக கணக்காய்வாளர் நாயகத்துடன் விசேட சந்திப்பொன்றை எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை நடத்தவுள்ளதாக கோப்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹதுன்னெத்தி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM