(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:
"பாடசாலைக்கல்வி வெறுமனே அறிவை மாத்திரமன்றி பொறுப்புள்ள, படைப்பாற்றல் மிக்க பிரஜையை உருவாக்குவதற்கும் போதிக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது.
எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்".
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM