ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ்ய நாணயக்கார மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோருக்கு அரசாங்கத்தின் பிரதியமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அந்தவகையில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இருவரும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் லக்ஷ்மன் செனவிரட்ன ஆதரவாக வாக்களி்த்திருந்தார். அத்துடன் மனுஷ்ய நாணயக்கார அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ்ய நாணயக்கார மற்றும் லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் தீவிர மஹிந்த ஆதரவாளராக செயற்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM