வட கொரியா மற்றும் தென் கொரிய படையினர் இரு நாடுகளையும் பிளவுபடுத்தும் இராணுவ மயமாக்கப்பட்ட எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டினை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
வடகொரிய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் காரணத்தினாலேயே பதில் தாக்குதலை தென்கொரியா மேற்கொண்டதாக சியோல் தெரிவித்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், உடல் நலம் குறித்து வெளியான செய்திகளினால், வடகொரியாவின் ஸ்தரத்தன்மை தொடர்பில் அச்சங்கள் எழுந்தது.
எனினும் மூன்று வாரங்களின் பின்னர் கிம் ஜொங் உன், முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக வட கொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாளின் பின்னர் இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM