(இராஐதுரை ஹஷான்)
மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும். அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச, தனியார் துறை சேவையாளர்கள் திங்கட்கிழமை முதல் கடமைகளில் ஈடுப்படுவதற்கான விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரையில் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பும்.
அனைத்து பிரதேசங்களுக்கும் புகையிரத சேவை ஈடுப்படுத்தப்படும். அரச, தனியார் துறையின் பிரதானிகள் ஊடாக பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கு அமைய சேவையாளர்கள் புகையிரத சேவையில் ஈடுபட முடியும்.
வாராந்தம் சேவையில் ஈடுப்படவுள்ள சேவையாளர்களின் பெயர் பட்டியல் புதன் கிழமைக்கு முன்னர் புகையிரத திணைக்களத்திற்கு குறித்த நிறுவனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத பற்றுச்சீட்டு பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக அனுப்பி வைக்கப்படும். புகையிரத பெட்டிகளில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். பயணிகள் அனைவரும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள விடயங்களை பின்பற்ற வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM