(நா.தனுஜா)
நாட்டில் ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்களுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை தெளிவாகின்றது.
எனினும் சாதாரண வறிய மக்களின் அன்றாட வாழ்க்கையும் இயல்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஏழாவது வாரமாகவும் நாம் ஊரடங்கு உத்தரவிற்கு உட்பட்டுள்ளோம். இக்காலப்பகுதியில் அதிக தேவையுடைய, வறிய மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு, உதவிகள் தேவைப்படுகின்றது. அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM