வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழம் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் ஏற்றிவந்த பழங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிரான்குளத்தில் இருந்து வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழங்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருக்கையில் முச்சக்கர வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்துடன் ஏற்றிவந்த இருபதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான வெள்ளரிப்பழங்கள் வீதியில் சிதறுண்டும், நசிபட்டும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM