'முக்கிய அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டே ஜனாதிபதி செயலாளர் பதில் வழங்கியுள்ளார்': மங்கள கடும் விசனம்

Published By: J.G.Stephan

01 May, 2020 | 04:09 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் பாராளுமன்றத்தை விரைந்து கூட்டுவது தொடர்பில் முன்வைத்த  முக்கிய அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டே ஜனாதிபதி செயலாளர் பதில் வழங்கியிருக்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார்.

அரச செலவினங்களுக்காக ஏப்ரல் 31 ஆம் திகதி வரையிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் காலத்திற்கான செலவுகளுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு மங்கள சமரவீர கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதற்கான பதில் கடிதம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'என்னுடைய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியமான அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்த பதில் வழங்கியிருக்கிறார்.

'அரசியலமைப்பின் 150(3) ஆம் சரத்து ஜனாதிபதிக்கு வெற்றுக் காசோலை ஒன்றை வழங்கவில்லை என்பதை மீண்டும் கூறுகின்றேன். ஜனாதிபதியால் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு மாத்திரமே நிதியொதுக்க முடியும். அவ்வாறெனின் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி என்ன?' என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32