அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஹிலாரி வாக்களிப்பதற்காக, ஹிலாரி கிளின்டனின் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இந்திய தொழில் அதிபர்கள் நன்கொடை வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் இந்திய அரசியல்வாதி அமர் சிங் பத்து இலட்சம் டொலர்கள் முதல் 50 இலட்சம் டொலர்கள் வரை கிளின்டன் குடும்ப அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM