அமெரிக்காவில் நியூயோர்க் நகரித்திலுள்ள பிரிஸ்பைடேரியன் வைத்தியசாலையில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் வைத்தியர் தற்கொலை செய்து கொண்டமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிறன்று குறித்த வைத்தியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் நியூயோர்க்கில் மாத்திரம் 17,500 பேர் கொரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.
லோர்னா பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கு திரும்பியவர்.
தானும் பிற வைத்தியர்களும் கஷ்டப்பட்டுப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது வேதனையைப் புரிந்து கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் இவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த தற்கொலை செய்துகொண்ட வைத்தியர், தொடர்ந்து மன வேதனையில் இருந்ததாகவும் எவருடனும் பேசாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூயோர்க்கில் வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் கொரோனா தொற்று அதிகரிப்பையடுத்து அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் 300 வைத்தியர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட வைத்தியர் லோர்னாவுக்கு மதிப்பளிக்குமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM