வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, மின்னழுத்தி, வாயு அடுப்பு, சிலிண்டர், அவண், மிக்ஸ்சி, தண்ணீர் பில்டர், கிளாஸ், கரண்டி உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட தேக்கவத்தை, நெளுக்குளம், மகாறம்பைக்குளம் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM