(செ.தேன்மொழி)
பாதுக்க - போரேகெதர பகுதியில் மர ஆலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரேகெதர பகுதியில் மர ஆலையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஹொரணை நகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் , இதன்போது பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் தீயை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதன்போது மர ஆலை பெரிதும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM