(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறப்பதற்கு சட்ட மா அதிபர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிடோருக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மாவர்தன மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அது குறித்து முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்தை திறப்பது மற்றும் அங்கு அதிகாரிகள் செல்வது ஆகியன பாதுகாப்பானதா என அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று, சட்ட மா அதிபர் திணைக்கள பாதுகாப்புக் ஊழியர்களுக்கு உணவு வழங்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதும், அவருடன் நெருக்கமாக செயற்பட்ட மற்றொரு ஆண் பாதுகப்பு உத்தியோகத்தர் உள்ளிட்டோர் அங்கு இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த 7 உத்தியோகத்தர்கள் தனிமைபப்டுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உருதியகையுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM