நாடு பொருளாதார நெருக்கடிக்குள் : தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் - தயாசிறி

Published By: J.G.Stephan

24 Apr, 2020 | 06:58 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 54 இலட்சத்துக்கும் அதிக குடும்பங்களுக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் வழங்கி ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரியாகத் திகழ்வதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இதன் பின்னணியின் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதால் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பசில் ராஜபக்ச தலைமையில் செயற்படுகின்ற ஜனாதிபதி செயலணியினால் பெருமளவானோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 5 இலட்சத்து 59 ஆயிரம் முதியோர் இதற்கு முன்னர் காணப்பட்டனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் நாம் தகவல் திரட்டிய போது இந்த எண்ணிக்கை 5 இலட்சத்து 94 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று அங்கவீனமுற்றோர் 35 ஆயிரத்து 229 பேர் காணப்பட்டனர். அந்த எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்து 677 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 39 ஆயிரத்து 170 நீரிழிவு நோயாளர்கள் முன்னர் இனங்காணப்பட்டனர். அது தற்போது 44 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக சமூர்த்தி பயனாளிகளான இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 6 இலட்சத்து 339 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் தற்போது சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 7 வரை அதிகரித்துள்ளது. இவர்கள் உள்ளிட்ட ஏனைய பல்வேறு தரப்பினருக்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு மற்றும் நிவாரணங்கள் ஊடாக ஏனைய நாடுகளுக்கு நாம் முன்னுதாரணமாகத் திகழ்கின்றோம்.

எனினும் இதன் பின்னணியின் நாம் வேறு பல நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அந்நிய செலாவணி முற்றாக முடங்கியுள்ளது. எனவே நாம் தற்போது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததன்  பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கம் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பில் பிரதான கவனம் செலுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50