பதுளை – மகியங்கனை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
கந்தகெட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான டபள்யு. எம். கருணாதிலக்க என்ற 49 வயது நிரம்பிய நபரே விபத்தில் பலியானவராவார்.
பதுளை – மகியங்கனை பிரதான பாதையின் 21 ஆவது மைல் கல்லருகே இன்று (24.04.2020) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கந்தகெட்டிய பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இவ் விபத்துக்கு காரணமென்று பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான நபரின் சடலம் மீகாகியுல அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM