உலகம் நூறுவருடங்களுக்கு முன்பு முகம்கொடுத்தது போன்ற ஒரு பாதிப்பை தற்போது முகம் கொடுக்க உள்ளதாக உலகசுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ள நிலையில், கொவிட் - 19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 25 இலட்சத்து 57 ஆயிரத்து நூற்று எண்பத்தொன்றாக நேற்றைய தினம் வரை பதவாகியுள்ளது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 177,641 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 690,444 ஆகவும் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இறப்பு சதவீதம் 6% ஆகவும், குணமடைந்தவர்களின் சதவீதம் 27% ஆகவும் காணப்படுகின்றது.
எனினும் அமெரிக்காவை பொறுத்தவரை, பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 818,744, ஆகவும், இறப்பு எண்ணிக்கை 45,318 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,923 ஆகவும், பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா கொவிட் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் நேற்றையதினம் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,985க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பாதிகப்பட்டவர்கள் வரிசையில் முதலாவதாக உள்ள ஸ்பெயினில், நேற்றையதினம் 3,968 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 204,178 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் இறப்பு எண்ணிக்கை 21,282 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,514 ஆகவும் உள்ளது.
மேலும் அதிக பாதிப்புகளை கொண்ட ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஆகிய நாடுகளில் கொவிட் தெற்று எண்ணிக்கை விபரம் வருமாறு,
இத்தாலி - தொற்று 183,957, இறப்பு 24,648, குணமடைந்தவர்கள் 51,600
பிரான்ஸ் - தொற்று 158,050, இறப்பு 20,796, குணமடைந்தவர்கள் 39,181
ஜேர்மணி - தொற்று 148,453 இறப்பு 5,086, குணமடைந்தவர்கள் 95,200
ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகியவை பூட்டுதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அத்துடன், பிரித்தானியாவில் இதுவரை 129,044 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 17,337, பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் நேற்றைய தினம் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத போதிலும் 11 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை சீனா இயல்புநிலை திரும்பி வருகின்றது.
அத்துடன் இந்தியாவில், நேற்றைய தினம் 1,541 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,080 ஆக உயர்நதுள்ளது, இங்கு 645 உயிரிழந்தும், 3,975 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டை மட்டும் நோக்கும் போது அங்கு, 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை இந்தியாவில் அதிகளவான தொற்றாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5218 பேர் தொற்றுக்குள்ளாகியும் 251 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இலங்கையில், நேற்று வரை 310 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 7 பேர் மரணமைடைந்தும் 102 பேர் குணமடைந்தும் உள்ளனர். இலங்கையில் அதிகளவான தொற்றாளர்கள் தலைநகரான கொழும்பில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM