கம்பளை கடுகண்ணாவை பகுதிகளில் மர்ம நபரொருவர் இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து சமைத்த உணவுகளையும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் இறைச்சி, மீன், முட்டைகளையும் திருடி வருவதோடு, தனிமையில் இருக்கும் பெண்களிடமும் சேஷ்டை புரிய முற்படுவதால் சுமார் 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் குறித்து இதுவரையில் கம்பளை மற்றும் கடுகண்ணாவை பொலிஸ் நிலையங்களில் 8 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்புலுவால, போவல நூறு ஏக்கர் மற்றும் கருகண்ணால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலகிறிகம போன்ற கிராமங்களுக்குள் புகும் குறித்த மர்மநபர் அங்கு தனிமையிலிருக்கும் பெண்களை வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளதுடன் வீடுகள் அனைத்திலிருந்த உணவுகள், குளிர்சாதனப் பெட்டிகளிலுள்ள இறைச்சி, மீன், முட்டைகள் என்பவற்றையும் திருடிச் செல்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட நபரினால் பாதிக்கப்பட்ட 4 பேர் கம்பளை பொலிஸ் நிலையத்திலும் ஏனையவர்கள் கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் செய்துள்ளனர். இதன்போது கடுகண்ணாவ பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த பிரதேசங்ககில் தேர்தல் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக கடந்த புதன்கிழமை மேற்குறிப்பிட்ட மர்ம நபர் கம்பளை அம்புலுவாவ பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுர்ந்து அங்கிருந்த சமைத்த உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன், முட்டை உட்பட பானை ஒன்றிணையும் திருடிக் கொண்டு போயுள்ளார். மர்ம நபரை பிடிக்க முற்பட்ட சமயம் குறித்த நபர் கல் ஒன்றினால் வீட்டுரிமையாளரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கம்பளை மற்றும் கடுகண்ணாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM