டோக்கியோவில் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் வேக நடைப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள, கேரளாவைச் சேர்ந்த 30 வயதான மெய்வல்லுநர் வீரரான கோலோத்தும் தோடி இர்பான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாவது,
“வேகநடைப் போட்டி மிகவும் நுட்பத்திறனானது. இதனை பார்க்க எளிதாக தெரியும். ஆனால் இந்த போட்டி மிகவும் கடினமானதாகும். உங்களது நுணுக்கம் தான் பதக்கம் வெல்ல உதவும். எனது பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்று இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நம்பிக்கையான மனநிலையுடன் செல்வேன்.
கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் பெங்களூரிலுள்ள சாய் பயிற்சி மையத்தில் நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் உள்ளது. அதை சாதித்து காட்டுவேன் என்று நம்புகிறேன்”என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM