தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவிப்பு

Published By: Digital Desk 3

21 Apr, 2020 | 01:42 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலுக்கான தினத்தை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய தொகுதி மட்டத்தில் இம்மாதத்திலிருந்தே தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் காணப்பட்ட சிக்கலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்வளித்துள்ளது. அதனை புறக்கணிக்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது. அதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே சுதந்திர கட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பித்திருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை தற்போது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எனினும் பாரியளவிலான கூட்டங்கள் அல்லது மக்கள் சந்திப்புக்களை துரிதமாக நடத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்கள் என்பவற்றை கட்டாயமாக பின்பற்றி தேர்தலுக்கான நடவடிக்கைககளில் ஈடுபடுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படும். எதிர்வரும் வாரங்களில் நாட்டில் நிலைவரத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00