மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் பிரதேச இளைஞர்களும், பிரதேச செயலக ஊழியர்களும் இணைந்து நேற்று (20) திங்கட்கிழமை பாரிய கசிப்பு நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது.
இதன் போது, 6 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கான 1000 லீற்றருக்கு மேற்பட்ட கோடா கைபற்றப்பட்டதுன், கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச இளைஞர்களின் உதவியோடு அப்பகுதியின் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அண்மைய கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இப்பெரும் தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிராமங்களில் உள்ள இளைஞர்கள், சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒத்துழைக்கின்றமை முன்மாதிரியான செயற்பாடாகும். இது போன்று ஏனைய இளைஞர்களும் முன்வருகின்ற போது சட்டவிரோத செயற்பாடுகளை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும், பல இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலைகள் முற்றுகை இடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், களப்பு மற்றும் நீர் நிலை அண்டிய காட்டுப்பகுதிகளிலே அதிகளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM