உடனடியாக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளமை தொற்றுப்பரவலை ஏற்படுத்தக் கூடும் : மன்னார் நகர முதல்வர்

Published By: Digital Desk 8

20 Apr, 2020 | 02:07 PM
image

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு உள்ளமை எமது மக்களிடையே மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 26 வது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்ற போதும் எமது நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் உயிர் இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அரசாங்கம் இத்தடைகளை நீக்காமல் பகுதி அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கலாம். உடனடியாக கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பது எமது மக்களிடையே தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி, எதிர்வரும் காலங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திக் கொள்வதை முழுமையாக அமுல்படுத்தாமல், பகுதியளவில் தளர்த்திக்கொள்ள வேண்டும்.

தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் தொடர்ந்துள்ளது.

வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற உத்தியோகஸ்தர் ஒருவரினால் கூட எமது மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தொற்று ஏற்படலாம். அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.எனவே அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் அமுல் படுத்த வேண்டும்.

எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே அரசாங்கம் பொலிஸ ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திக் கொள்ளும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. 

இலங்கையின் வைத்தியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் கொரோனா தொற்றும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என அறிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உள்நோக்கம் இருக்கின்றமை தெரிய வருகின்றது.

 அரசாங்கத்திற்கு தேர்தலே பிரதான இலக்காக உள்ளதே தவிர மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. தற்போதைய சூழ்நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48