தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து 

19 Apr, 2020 | 03:30 PM
image

அன்னை பூபதியின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் நினைவுகூருவதற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பொலிசார் தடைவிதித்துள்ள நிலையில் அவரது மகள் தனது வீட்டில் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து உணர்வுபூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினைரை வெளியேற பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கம் ஆலய முன்றலில் அன்னையர் முன்னணி தலைமையில் அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.

இந்த நிலையில் இன்று அன்னை பூபதியம்மாவின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலையில் மாமாங்கத்திலுள்ள பூபதியம்மாவின் மகளின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக ரத்து செய்துள்ளனர். 

இதன் காரணமாக இன்றை தினம் அன்னை பூபதியின் நினைவேந்தலை செய்யமுடியாமல் போயுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை காலையில் குறித்த சமாதியில் நினைவேந்தல் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி  தெரிவித்தார். 

இந்த நிலையில் அன்னை பூபதியின் மகள் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மார்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55