கொரோனாவின் நிலை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு !

18 Apr, 2020 | 09:20 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் தொற்று சமூகமயமாவதிலிருந்து கட்டுப்படுத்தி விட்டோமே  தவிர முழுமையாக அழித்து விட வில்லை. சில தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

எனவே தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடனான தளர்வுகளே முன்னெடுக்கப்படும். சுகாதார பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகளில் இருப்பார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து இன்று  ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அணில் ஜாசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இலங்கையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும்.

அவ்வாறானதொரு சுகாதார பாதுகாப்பான சூழல் நாட்டில் இன்னும் ஏற்பட வில்லை. குறித்த வைரஸ் ஆனது சமூகமயமாதலை கட்டுப்படுத்தியுள்ளோம். இதற்காக அச்சுறுத்தல் இல்லை அல்லது குறைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.

குறிப்பாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை பரந்தளவில் முன்னெடுத்திருந்தோம் . அதன் ஊடாகவே வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதிலிருந்து பாதுகாக்க முடிந்தது. 

எனவே நாட்டில் தற்போது சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு துறையினரும் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும். முன்னெடுக்கப்படும்.

ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட ஏனைய கட்டுப்பாடுகளில் தளர்வு நிலை ஏற்படுத்தினாலும் கூட கொரோனா ஒழிப்பு திட்டம் மற்றும் கண்காணிப்பும் ஏற்கனவே இருந்ததை போன்று முன்னெடுக்கப்படும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோமே தவிர முற்றாக அழித்து விட வில்லை. இன்னும் சிறு காலம் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51