வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட நடவடிக்கை - தினேஷ் குணவர்தன

Published By: Vishnu

18 Apr, 2020 | 03:59 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் கல்விக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அத்தோடு பயிற்சிகளுக்காகச் சென்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப எதிர்பார்ப்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது விபரங்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் வெவ்வேறு நாடுகளிலுமுள்ள தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனினும் இது வரையில் இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் பரவலின் அபாய நிலையிலிருந்து முழுமையாக மீண்ட பின்னரே ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் விமான நிலையங்களைத் திறப்பதைப் பற்றி கவனம் செலுத்த முடியும்.

எனவே நாட்டு மக்கள் அனைவரும் அதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37