நீதி­யைப்பெற வெளிநாட்டு நீதி­ப­தி­களே தேவை­யென மக்கள் நம்­பு­கின்­ற­னர்

Published By: Robert

24 Jun, 2016 | 09:07 AM
image

தகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்தின் உண்மை­யான நோக்கம் அடை­யப்­ப­டு­வதை உறுதி செய்­ய­வேண்­டு­மென வலி­யு­றுத்­திய தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க் ­கட்­சித் ­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்துவ­தில் அர­சி­யல்­வா­திகளின் தலை­யீ­டு­களை தவிர்க்­க­வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இலங்கை நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­தன்­மையும் பக்­கச்­சார்­பின்­மையும் அவற்றின் கௌர­வமும் பாது­காக்­கப்­ப­டாத நிலை தொடர்­வதன் கார­ண­மா­கவே தற்­போதும் வெளிநாட்டு நீதி­ப­தி­க­ளினால் மட்­டுமே நீதியை பெற்­றுத்­தர முடியும் என்று மக்கள் பலரும் நம்­பிக்கை வைத்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற தகவல் அறியும் உரி­மைக்­கான சட்­ட­மூல விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றுகையி­லே­யே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தக­வ­ல­றியும் உரி­மைக்­கான சட்­ட­மூலம் இந்த பாரா­ளு­மன்­றத்தில் நீண்ட காலத்­துக்கு முன்­ன­தா­கவே கொண்டு வரப்­பட்­டி­ருந்த போதிலும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. தகவல் அறியும் உரி­மைக்­கான சட்­ட­மா­னது பல நாடு­க­ளிலும் உள்­ளது. இந்த சட்­ட­மா­னது அடிப்­படை உரி­மை­க­ளையும் ஜன­நா­ய­கத்­தையும் பலப்­ப­டுத்­து­கி­றது. அதன் விளை­வா­கவே மக்கள் பல­ம­டை­கின்­றனர்.

மக்­களின் இறை­யாண்மை அர­சாங்கம், நிறை­வேற்று அதி­காரம், சட்­ட­வாக்கம், நீதித்­துறை, அடிப்­படை உரி­மைகள் மற்றும் வாக்­கு­ரிமை ஆகி­ய­வற்றில் தங்­கி­யுள்­ளது. பல்­வேறு நிறு­வ­னங்­களும் அதி­கா­ரங்­களை மக்­களின் பெயரால் அனு­ப­விக்­கின்­றன.

ஆட்சி அதி­கா­ரங்­களை வெவ்­வே­றான ஆட்­சி­முறை நிறு­வ­னங்­க­ளான நிறை­வேற்று அதி­காரம், சட்­ட­வாக்கம் மற்றும் நீதித்­துறை என்­பன அனு­ப­விக்­கின்­றன. இவை ஒன்றில் இன்­னொன்று தலை­யீடு செய்துக் கொள்­வ­தில்லை. ஜன­நா­ய­கத்­தையும் மக்­களின் இறை­மை­யையும் பாது­காப்­ப­தற்கு தகவல் அறியும் உரிமை அடிப்­ப­டை­யாகும்.

மக்கள் தங்­க­ளது இறை­யாண்மை, ஜன­நா­யகம் ஆகி­ய­வற்றைப் பாது­காப்­ப­தற்கு அர்த்­தப்­புஷ்­டி­யான பங்­க­ளிப்பை வழங்க வேண்டும். அவ்­வா­றாயின் நாட்டில் இடம்­பெறும் விட­யங்கள் பற்றி குறிப்­பாக ஆட்­சி­முறை சம்­பந்­த­மான விட­யங்கள் தொடர்­பாக அறிந்­தி­ருக்க வேண்டும்.

அனைத்து தக­வல்­க­ளையும் முழு­மை­யாக அறி­யத்­த­ரு­வ­தென்­பது நடை­முறை சாத்­தி­ய­மற்­ற­தாகும். தேசிய நலன் சார்ந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது. ஆட்­சி­முறை பற்றி நம்­ப­க­ர­மா­னதும் துல்­லி­ய­மா­ன­து­மான தக­வல்­களை மக்கள் பெறக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

ஆட்சி என்­பது குறித்­த­வொரு காலப்­ப­கு­திக்­கான பொறுப்­பா­ளி­யாக உள்­ளது. அதன் கட­மை­க­ளா­னது மக்­களின் ஆய்வில் இருந்தும் பார்­வையில் இருந்தும் விலகிச் செயல்­பட முடி­யாது. தக­வல்கள் வழங்­கப்­படும் போதே மக்கள் அது­பற்றி ஆய்வில் ஈடு­பட முடியும். இதுவே இந்த சட்­டத்­திற்­கான நியா­யப்­பா­டாகும்.

இந்­நாட்டில் அர­சாங்­கங்கள் மக்­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தாக இருந்­த­தில்லை. தேர்தல் காலங்­களில் மட்­டுமே அர­சாங்­கங்கள் பதி­ல­ளித்­துள்­ளன.

இச்­சட்­ட­மூ­லத்தின் மூலம் இந்­நி­லை­மையை மாற்­றி­ய­மைக்க கூடி­ய­தாக இருக்கும் என்ற எதிர்­பார்ப்­புள்­ளது. வீண் விர­யங்கள் மற்றும் ஊழல்­களை தடுத்து, பாரா­ளு­மன்­றத்­தினால் ஏது­மொரு விட­யத்­துக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியின் பயன்­பாடு பற்றி அறிந்­துக்­கொள்ள முடியும்.

எமது நாட்டில் நிறு­வ­னங்கள் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­படும் கலா­சாரம் இருக்­கி­றது. நீதித்­துறை கூட அதி­லி­ருந்து தப்­பி­யி­ருக்­க­வில்லை. இந்த நாட்டின் நீதித்­துறை மீது ஒரு காலத்தில் கௌரவம் இருந்­தது.

நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­தன்மை மற்றும் பக்­கச்­சார்­பின்மை பற்­றிய அந்த கௌரவம் தொடர்ந்தும் நீடித்­தி­ருக்­க­வில்லை. இதன் விளை­வாக சட்ட ஆட்சி பாதிக்­கப்­பட்­ட­துடன், அதன் பெறு­பே­றாக நாடும் பாதிப்­பு­களை சந்­தித்­தது. தற்­போது கூட நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வதை உறுதி செய்ய வெ ளிநாட்டு நீதி­ப­திகள் தேவை என்­கின்ற நிலைமை காணப்­ப­டு­கி­றது. வெளிநாட்டு நீதி­ப­தி­க­ளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்றே மக்கள் பலரும் கருதுகின்றனர்.

இச் சட்டமூலத்தின் உண்மையான நோக்கங்களை அடைவது என்றால், இச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும். இச்சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தவொரு அரசியல்வாதிகளின் தலையீடுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இச் சட்டமூலத்தின் கீழான நிறுவனங்களுக்கு மிகவும் பொறுப்பான கடமைகள் இருக்கின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56