(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை நகைச்சுவையாக இருக்கிறது.
காரணம் ஜனாதிபதி செயலகத்தினால் அல்லது அலரி மாளிகையினால் அனுப்பப்பட்ட கடிதங்களை வைத்துக் கொண்டு யாரும் கைது செய்யப்படுவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், தேர்தலை இலக்காகக் கொண்டு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றமை நகைச்சுவையாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் அல்லது அலரி மாளிகையினால் அனுப்பப்பட்ட கடிதங்களை வைத்துக் கொண்டு யாரும் கைது செய்யப்படுவதில்லை.
இந்த விசாரணைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் தலையீடுகள் இடம்பெறவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். இந்த குழு தேர்தல் காலத்தில் நியமிக்கப்படவில்லை. அக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அமைச்சரொருவரின் சகோதரரா அல்லது பிரிதொருவரா என்பது பற்றி ஆராயப்படமாட்டாது. சட்ட ரீதியாக இவற்றை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM