நடிகர் சீயான் விக்ரமின் 54 ஆவது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னணி பேசும் கலைஞர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் நடிகர் சீயான் விக்ரம். தன்னுடைய 54 வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு, திரை உலகில் பல கலைஞர்களும், அவருடன் பணியாற்றியவர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டில் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக விக்ரம் அறிமுகமாகி இருந்தாலும், 1999 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படமே இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. அதன் பிறகு தில், தூள், காசி, ஜெமினி, சாமி, பிதாமகன், அந்நியன் ,கந்தசாமி பல வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வலம் வரும் இவர், தன்னுடைய மகன் துருவ் விக்ரமையும்‘ ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்த அதிக விருதுப் பெற்ற நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது இவரது தனிப்பட்ட சிறப்பு.
இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ என்ற படத்தில் எட்டுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அத்துடன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்திலும், இயக்குனர் ஆர் எஸ் விமல் இயக்கத்தில் ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM