(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நான்கு மணிநேர விஷேட விசாரணைகளை இன்று நடாத்தியது.
மன்னார் பகுதியில் வீட்டமைப்பு திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தும் விதமாக காணி கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக் கேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து 2.10 மணியளவில் வெளியேறியிருந்தார்.
அண்மையில், வெள்ளவத்தை பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீடொன்றிலிருந்து பல்வேறு ஆவணங்கள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மீட்கப்பட்டிருந்தன.
அதன் போது சுமார் 250 காணி உறுதிகள் வரை மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. அதில் இருந்த காணி உறுதிகளை மையப்படுத்தியே முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில் கடந்த 14 ஆம் திகதியும் ரிஷாத் பதியுதீனிடம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்த நிலையிலேயே, அதன் தொடர்ச்சியாக இன்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM