மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்திசெய்து வந்த நிலையில் குறித்த பகுதி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையம் ஒன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிட்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக் குணவர்தன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.
இதன்போது 23பரல்களில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4170 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ள அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் மேற்கு பிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சனா கௌரியின் ஆலோசனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வழிகாட்டலில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கசிப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் நேற்று இரவு விவசாயிகளுக்கான பயண அனுமதிப்பத்திரத்தினை வைத்துக்கொண்டு கசிப்பு காய்ச்சுவதற்கான பொருட்களை கொண்டுசென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 25கிலோ கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கலந்த சீனி மீட்கப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM