பொலிஸ் தலைமையகம் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை !

Published By: Digital Desk 3

12 Apr, 2020 | 02:41 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்கு சட்டத்தின் போது செயற்படுவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியிலும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பிரவேசிப்பதற்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். அத்தியவசிய சேவை என்ற போர்வையில் ஹெரோயின் கடத்தல், சட்டவிரோத மதுபான விநியோகம் மற்றும் மாடுகளை ஏற்றிச் செல்லல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியர் போன்ற போர்வையில் நபரொருவர் ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முற்பட்ட போது பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர். இவர்கள் இன்னும் வைரஸ் தொடர்பில் காணப்படும் அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொள்ளாதே செயற்பட்டு வருகின்றனர்.

வைரஸ் பரவலின் காரணமாக ஏற்படும் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே அரசாங்கம் ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது. இந்த தருணத்திலும் சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.

இது போன்ற நபர்கள் தொடர்பில் பெரிதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20