கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியல் முடக்குதலை மேற்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான டென்மார்க் அதனை தளர்த்தி கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.
குறைந்தது ஒரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த டென்மார்க்கில் கொரோனா தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து முதல் படியாக பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை புதன் கிழமை முதல் மீண்டும் திறக்க உத்தேசித்துள்ளது.
அத்துடன் பார்கள், உணவகங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை திறப்பதற்கும் மற்றும் 10 க்கும் மேற்பட்ட நபர்களின் பொதுக் கூட்டங்களுக்கு எதிரான தடை போன்றவை நீக்கப்படுவதற்கும் இன்னும் ஒரு மாத காலமாவது ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பூட்டுதல் விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டால் மட்டுமே இந்த திட்டம் செயல்படும் என்று டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்துள்ளார்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,
'இது இறுக்கமான பாதையில் நடப்பது போன்றதாக இருக்கும். 'நாங்கள் வழியில் நின்றால் நாம் விழக்கூடும், நாம் மிக வேகமாக சென்றால் அது தவறாக போகக்கூடும்.
எனவே, நாம் சரியான நேரத்தில் ஒரு எச்சரிக்கையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டில் இதுவரை 5,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 260 பேர் இறந்தும் 1955 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM