சட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Published By: Vishnu

10 Apr, 2020 | 05:47 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று பரவாது இருப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறான நெருக்கடியான நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்று வியாழக்கிழமை பொலிஸாரும் , கலால் படையினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 10 இலட்சத்து 84 ஆயிரம் கோடாக்கள்  (6 பீப்பாய்கள்) மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரும் கைத செய்யப்பட்டுள்ளார்.

இம்புல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  மிஹிந்தலை - வெல்லாரகம பிரதேசத்தின் வனப்பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபடபட்டிருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 215 லீட்டர் கோடாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை எல்பிட்டி பகுதியில் கலால் படையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44