அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு !

Published By: Vishnu

10 Apr, 2020 | 01:57 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசாங்கம்  இந்த உடனடித் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள  இந்த விசேட அறிக்கையில் கூறப்படுவதானது, 

நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும்  உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும்  மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும். கொவிட் 19 தனிமைப்படுதல் செயற்பாடுகளில் முன்னேடுக்கப்படவேண்டிய சேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும்,  நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாலர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் மூலமாக பதில் பொலிஸ்மா அதிபர், நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், உணவு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06