(ஆர்.யசி)
நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த உடனடித் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள இந்த விசேட அறிக்கையில் கூறப்படுவதானது,
நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும் உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும் மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும். கொவிட் 19 தனிமைப்படுதல் செயற்பாடுகளில் முன்னேடுக்கப்படவேண்டிய சேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும், நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாலர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் மூலமாக பதில் பொலிஸ்மா அதிபர், நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், உணவு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM