நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் குணமடைந்தனர்

Published By: Vishnu

10 Apr, 2020 | 12:47 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த மேலும் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இதுவரை இலங்கையில் மொத்தமாக 190 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டில் 21 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தினமும் 10 அல்லது அதற்கும் குறைவான புதிய கொரோனா தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் மாத்திரம் புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

அதன்படி கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் 190 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் அவர்களில் 50 பேர் தற்போது சிகிச்சையின்  மூலம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 

அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீதமுள்ள 133 பேரும் தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை,  கொழும்பு கிழக்கு (முல்லேரியா) ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47