மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடாத்திச்செல்லப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா, கரையாக்கந்தீவு, காந்துநகர், காஞ்சிரங்குடா, பனையறுப்பான், பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் நேற்று இரவு, மற்றும் இன்று வியாழக்கிழமை காலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்படி கசிப்பு நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அதனுடன் தொடர்புப்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் நடவடிக்கையை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் பார்வையிட்டதுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இதுவரை வடிசாராயம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM