யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றம் இந்த பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும்,மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்தார் .
யாழ்.போதனா வைத்தயிசாலையில் இன்று வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ், யாழ்.பல்கலைககழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலை துண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலை தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் செ.கண்ணதாசன் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 5 நாட்களில் மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேருக்கு பரிசோதனைகளை ஒரு தடவையில் மேற்கொள்ள முடியும்.
அதற்கு மேலதிகமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செய்வதன் மூலம் 45 பேருக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரால் பரிந்துரைக்கப்படும் நபர்களின் மாதிரிகளே குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM