அரச நிவாரணங்களுடன் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை - கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம்       

08 Apr, 2020 | 01:14 PM
image

கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள சகல வட்டாரங்களிலும் உதவி தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும், அரசாங்கதின் “சௌபாக்கியா” விவசாய வேலைத் திட்டத்தை ஊக்குவிக்கவும் கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

   

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சமூக இடைவெளியைப் பேணும் வகையில் இடம்பெற்றதோடு உறுப்பினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தபடி கலந்து கொண்டிருந்தார்கள்.

 

மேற்படி சபை அமர்வின் போது, தற்போதைய “கொரோனா” வைரஸ் சூழ்நிலையில் பிரதேச சபைக்கு உட்பட்ட சகல பிரதேசங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறையை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் “கொரோனா” வைரஸ் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து பிரதேசத்தின் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் கேட்டுக் கொண்டார்.

   

அத்தோடு, நாட்கூலி வேலை செய்கின்றவர்கள், ஊனமுற்றோர், விதவைகள், முதியோர் முதலானோரின் தகவல்கள் திரட்டப்பட்டு அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

   

மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள “சௌபாக்கியா” விவசாய வேலைத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊக்குவிக்கும் வகையில் சேதனப் பசலையின் விலையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய இதுவரை காலமும் பிரதேச சபையின் ஊடாக 25 ரூபாவுக்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சேதனப் பசளை இனிமேல் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  

    இது தவிர, மத்திய மாகாண சபையின் ஊடாக விநியோகிக்கப்படும் விதை வகைகளை கொட்டகலை பிரதேச விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், அரசாங்கத்தின் 5000 ரூபா நிவாரண உதவித் திட்டம் கொட்டகலை பிரதேசத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ராஜாமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27