கடந்த மாத சம்பளத்தைப் பெறாதோர் தொடர்பில் ஜனாதிபதியும் அரசும் கவனம் செலுத்த வேண்டும் - நஸிர் அஹமட் 

07 Apr, 2020 | 07:55 PM
image

ஹொரோனா பரவல் காரணமாக நாடு பெரும் இடர்களைச் சந்தித்து வருகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரசதரப்பினரும் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  

எனினும் சில குறைபாடுகள் எமது கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்கள்,  சமய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அலுவலகர்கள், கடந்த மாத சம்பளத்தை தாம் இதுவரை பெறமுடியாத நிலை இருப்பதாகச் சுட்டி காட்டுகின்றனர்.

எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதியும் அரசும் கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பது என்பது இலகு வான காரியம் அல்ல. அவ்வப்போது ஆங்காங்கே குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும் எனினும் அவற்றை சுட்டிகாட்டி அதற்கான மாற்று வழிமுறைகளை ஏற்பாடு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

இன்றைய நிலையில் ஆன்றாடம் தொழில் செய்து வருமானம் ஈட்டுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள், சைக்கிள் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் பாதிப்புற்றுள்ளனர்.

 இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகைளில் திட்டங்கள் அமுல்படுத்தப் படவேண்டும். அத்தோடு இவர்களது தொழிலை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப  திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசும் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை, சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அரசு 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்குவதாக அறிவித்தபோதும். அவை அவர்களது வைப்பு கணக்கில் இருந்து தான் வழங்கப்படுகிறது எனவும் அதிலும் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாதான் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர். 

இது விடயத்தில் மக்களின் சந்தேகங்களை போக்கும்வகையில் செயன்முறைகள் உருவாக்கப்பட வேண்டும் எதிர்வரும் கொடுப்பனவுகள் அரசின் நிவாரண கொடுப்பனவுகளின் ஊடாக கிடைக்க வழி செய்யவேண்டும். என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் முன் வைக்க விரும்புகிறேன். என தெரிவக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22